Thursday, May 3, 2007

கவிப்பால்

உழைப்பால்,
உறங்கிட களைப்பால்,
கனவினில் அவள் வந்து அனைப்பாள்.
சிரிப்பால் மனதினை துளைப்பாள்.
உதட்டால் கன்னத்தை நனைப்பாள்.
தலைப்பால் பின் அதை துடைப்பாள்.
உயிரே என்றெனை விளிப்பாள்.
உன்னவள் நானென துடிப்பாள்.

பரபரப்பால்,
பின்வரும் விழிப்பால்,
இது எத்தனை நாளென்ற சலிப்பால்.
அனைத்தையும் சொல்லிட அவள்பால்,
அனுகிட, வியப்பால்,
நின்றவள் விழிப்பாள்.

வாயடைப்பால்,
வார்த்தை தடுப்பால்,
வந்தவழி திரும்ப, வெறுப்பால்,
சுட்டெனை எரிப்பாள்.

புலிப்பால்
இது என்ற நினைப்பால்,
பெண்பால்
இருந்த மனப்பால்,
நிறுத்திட போட்டேன் தாழ்ப்பாள்.

விலகிட இதனின்றி அப்பால்,
கவிதை படைப்பால்,
கவிப்பால்
அதுதரும் களிப்பால்,
பருகுவேன் அனுதினம் தமிழ்பால்.

1 comment:

Anonymous said...

dear ammakkannan, all your "puthukavithaigal" really superb..... "nalla tamil nadai, puthukavithai enru solvatharkillai, marabukavithai pola irukkirathu" vazhthukkal. shankar