உறக்கத்தின் ஜன்னல்களிலும்,
தனிமையின் இடைவெளிகளிலும்,
மீண்டும் மீண்டும்,
ஏனோ முகம் காட்டிக்கொண்டே இருக்கிறாய்.
அதுவும் எங்கோ கைகளுக்கு எட்டாமல்,
அடிமனதின் ஆழத்தில்.
அழித்துவிட்டேன் என நான்
ஆசுவாசப்படுகையில்,
சின்ன புன்னகையோடு
எழுந்து வருவாய் வேடிக்கையாய்.
தெரியும் எனக்கு,
உயரத்தில் சுற்றித்திரியும்
உன் பார்வைக்கு,
வெறும் புழுவாய் தெரிவேன் நான்.
அது புரிந்தும்,
உதிர்ந்து போன நினைவுகளுக்கு மத்தியிலும்,
வெட்கமே இல்லாமல்,
உன் எச்சங்களை சுமக்கிறது என் மனம்.
Thursday, May 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
good one !u have a good taste !
Post a Comment