என் முக அழகிலும்,
உடல் வடிவிலும்,
மனதைத் தொலைத்தவனே,
கடிதம் கிடைத்தது உனது.
கண்டதும் என்மேல்
காதல் வந்ததாய் கிறுக்கல்கள்.
உருவங்கள் ஒதுங்கி,
உள்ளங்கள் உரசி,
உயிர்தீ பிடிப்பது காதல்.
நீயோ கண்களின் சந்திப்பில்
விளையும் காமச் சாயத்தில்,
கரைந்து விட்டாய் போலும்.
ஆர்பரித்து அடங்கிவிடும்
அலையல்ல பெண்.
அத்தனை செல்வமும்
ஆழங்களில் அடக்கி
அமைதி காக்கும் நடுக்கடல்.
நண்பா,
நிஜ உலகில் நின்று,
விறுப்பு வெறுப்பு விவாதித்து,
கருத்து வேறுபாடுகள் கருதி,
பிரிதொருநாள்,
நாமே அறியாமல்,
உனதிருப்புக்கு நானும்,
எனதிருப்புக்கு நீயும்,
எதிர் நோக்கினால்.
எடுத்துச் சொல்வோம்
மென்மையாய்,
காதலிப்பதை.
எப்போதாவது புரியும் உனக்கிது !!
அப்போது மட்டும் வா,
எங்காவது உட்கார்ந்து பேசுவோம்,
புதுக்கவிதை முதல்,
புதுமைபித்தன் வரை.
Thursday, May 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment