Thursday, May 3, 2007

உயரத்தில் நீ

பிரியமானவளே,

மலைபோல் உயரத்திலிக்கிறாய் நீ
உன் சிகரங்களை எட்ட,
சிறகுகள் இல்லை எனக்கு.
இருந்தும் என்ன,
கடல் அலைபோல்,
நனைத்துக் கொண்டிருப்பேன்,
உன் காலடியை.


உள்ளத்தின் அன்பு,
உயரங்களை கடந்தது.
உயிருக்கு காற்றாய்,
உள்ளத்திற்கு காதல்.

ஸ்வாசித்தலும்,
நேசித்தலும்,
ஸப்தங்களில் தானே
வேறுபடுகிறது.

ஸ்வாஸத்தால் உயிரும்,
நேசத்தால் உலகும்
உயிர்த்திருக்கிறதல்லவா.


கூட்டிக் கழித்து

சரிப்பார்த்தல் கணக்கு
உள்ளங்கள் கூடி
குளிர்ந்து
சுயமிழப்பதல்லவா காதல்.

என்றேனும் ஒருநாள்

என் உள்ளத்தின் பிரார்த்தனைக்கு,
உன் உயரத்தை சுருக்கித் தா.
அன்று நம் வித்தியாசங்கள்
விலகிக் கொள்ளும்,
சம வெளிகளில் சந்திப்போம்.

உயரத்திலேயே நீ
இருந்துக் கொண்டாலும்,
உடைந்து விடமாட்டேன் நான்.

நேசித்ததும், ஸ்வாசித்ததும்,
வசப்படுத்திக் கொள்ள அல்ல,
உன் மூலங்களில் துவங்கிய
என் பார்வைகளால்.
உன் உணர்வுகளை
நான் உளமாற மதித்ததினால்.

முடிவாய் பெண்னே,
என்னை இல்லையேனும்
எவரையாவது நேசி.

நேசிக்க படுவதிலும்,
நேசித்தல் சுகமானது.

No comments: