Thursday, May 3, 2007

கரைந்து போ

இதயமே,
மனசு முழுதும் காதலா ?

மறைக்காமல் சொல்.

சொல்லி விட்டால்
மன நிறைவு.
சொல்லாமல் தங்கி விட்டால்
சுடும் நெருப்பு.

வித்தியசங்களையும்,
விளைவுகளையும் யோசித்து,
நெஞ்சில் ஏன் நெருப்பு சுமக்கிறாய் ?

தவறு வெளிப்படுத்துவதில் அல்ல,
எதிர்ப்பார்த்தலில்.

நேசிக்கிறேன் என்பது யாசிப்பதல்ல,
நெஞ்சில் சுரக்கும் வசந்தத்தை
வாசிப்பது.

உன் நேசம் உண்மையானதா ?

உன்னை நீயே உறுதி செய்.
நிமிர்ந்து செல்,
நேர்கொண்டு சொல்,
வெற்றித் தோல்விகள்
விலகி நில்.

காதல் அன்பின் கடல்,
கரைந்து போ,
அல்லது கரையில் இரு.
நீந்தி பழகிட,
நீச்சல் குளமல்ல அது.

உன்னிலும் மேல்,
உன்னவரை நேசிக்கையில்,
உனதென்பவை அற்று போகும்,

தன்னை இழந்து,
தன்னலம் மற்ந்தவரை,
வெற்றி எங்கே மாலையிடுகிறது ?
தோல்வி எங்கே துன்புறுத்துகிறது ?

எல்லாம் அவன்(ள்)
என்ற எதுவுமற்ற நிலையில்
எங்கிருக்கிறாய் நீ ??

No comments: